உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—1994 | ஆகஸ்ட் 1
    • மாறும் சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில் வளைந்துகொடுத்தல்

      6. பேய்ப்பிடித்திருந்த மகளை உடைய புறஜாதிப் பெண்ணின் விஷயத்தில் எவ்வாறு இயேசு நியாயத்தன்மையை வெளிக்காட்டினார்?

      6 வழியை மாற்றிக்கொள்ள அல்லது புதிய நிலைமைகள் எழும்பியபோது அவற்றிற்கு ஏற்றாற்போல மாற்றியமைத்துக்கொள்வதில் இயேசுவும் யெகோவாவைப்போல துரிதமாகச் செயல்படுபவராய் தம்மை நிரூபித்தார். ஒரு சமயத்தில், ஒரு புறஜாதிப் பெண், மோசமாகப் பேய்ப்பிடித்திருந்த தன் மகளைக் குணப்படுத்தும்படி அவரிடம் கெஞ்சினாள். இயேசு அவளுக்கு உதவிசெய்யப்போவதில்லை என்பதாக ஆரம்பத்தில் மூன்று வித்தியாசமான வழிகளில்—முதலாவதாக, அவளுக்குப் பதிலளிக்க மறுப்பதன்மூலம்; இரண்டாவதாக, அவர் புறஜாதிகளிடம் அல்ல, ஆனால் யூதர்களிடம் அனுப்பப்பட்டார் என்று நேரடியாகக் குறிப்பிடுவதன்மூலம்; மூன்றாவதாக, அதே குறிப்பை இயல்பாக உணர்த்தக்கூடிய ஒரு உவமையைச் சொல்வதன்மூலம் அவளிடம் குறிப்பிட்டார். என்றாலும், அந்தப் பெண் வழக்கத்திற்கு அதிகமான விசுவாசத்திற்கு சான்றளிப்பவளாய், இவை எல்லாவற்றிற்குப் பின்னும் விடாப்பிடியாகத் தொடர்ந்தாள். இந்த விதிவிலக்கான சூழ்நிலையைக் கவனத்தில் கொள்கையில், ஒரு பொதுவான சட்டத்தை அமல்படுத்துவதற்கு இது சமயம் அல்ல என்பதை இயேசுவால் காண முடிந்தது; மேலான நியமங்களுக்குப் பிரதிபலனாக வளைந்துகொடுப்பதற்கான சமயமாக இது இருந்தது.a இதன் காரணமாக, இயேசு மூன்று முறைகள் எதைச் செய்யமாட்டார் என்பதாகக் குறிப்பிட்டாரோ, சரியாக அதையே செய்தார். அந்தப் பெண்ணின் மகளைக் குணப்படுத்தினார்!—மத்தேயு 15:21-28.

  • நியாயத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—1994 | ஆகஸ்ட் 1
    • [பக்கம் 16-ன் படம்]

      ஒரு பெண் வழக்கத்திற்கு அதிகமான விசுவாசத்தைக் காண்பித்தபோது, ஒரு பொதுவான சட்டத்தை அமல்படுத்துவதற்கு அது சமயமல்ல என்று இயேசு கண்டார்

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்