உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
    • 18-20. (அ) இயேசு தமது வல்லமையை பயன்படுத்திய விதத்தை எது பாதித்தது? (ஆ) இயேசு ஒரு செவிடனை குணப்படுத்திய விதத்தைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?

      18 இந்த வல்லமைமிக்க மனிதராகிய இயேசு, மற்றவர்களின் தேவைகளையும் துன்பங்களையும் துளியும் பொருட்படுத்தாமல் இரக்கமின்றி அதிகாரம் செலுத்தியிருக்கும் ஆட்சியாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருந்தார். இயேசு மக்கள்மீது கரிசனை காட்டினார். துன்பத்திலிருந்தவர்களை வெறுமனே பார்த்ததும்கூட அவர் மனதை அந்தளவு உருக்கியதால் வேதனையிலிருந்து அவர்களுக்கு விடுதலையளிக்க தூண்டப்பட்டார். (மத்தேயு 14:14) அவர்களது உணர்ச்சிகளுக்கும் தேவைகளுக்கும் கவனம் செலுத்தினார்; இப்படிப்பட்ட கனிவான அக்கறை, அவர் தம் வல்லமையை பயன்படுத்திய விதத்தை பாதித்தது. இதயத்தைத் தொடும் ஓர் உதாரணம் மாற்கு 7:31-37-ல் காணப்படுகிறது.

      19 இந்தச் சந்தர்ப்பத்தில், திரளான மக்கள் இயேசுவை தேடிவந்தனர், அவர்களில் அநேகர் வியாதிப்பட்டிருந்தனர்; அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். (மத்தேயு 15:29, 30) ஆனால் அவர் ஒரு மனிதனுக்கு மட்டும் விசேஷ கவனம் செலுத்தினார். அவன் கொன்னைவாயுடைய ஒரு செவிடனாக இருந்தான். அவனுடைய பிரத்தியேகமான பயத்தை அல்லது கூச்சத்தை இயேசு கவனித்திருக்கலாம். ஆகவே முன்யோசனையுடன் அவனை கூட்டத்திலிருந்து தனியே கூட்டிச் சென்றார். பிறகு தாம் என்ன செய்யப் போகிறார் என்பதை சில சைகைகளால் அம்மனிதனுக்கு தெரியப்படுத்தினார். “அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பின்பு அவனுடைய நாக்கைத் தொட்டார்.”c (மாற்கு 7:33) அடுத்ததாக பரலோகத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு ஜெபம் செய்தார். இந்த செயல்கள் மூலம், ‘நான் உனக்கு செய்யப்போவது கடவுளுடைய வல்லமையால்தான்’ என அம்மனிதனிடம் சொல்லாமல் சொன்னார். இறுதியில், “திறக்கப்படு” என்றார். (மாற்கு 7:34) உடனடியாக அவனுடைய காதுகள் திறந்தன, சரளமாக பேசவும் ஆரம்பித்துவிட்டான்.

  • ‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
    • c உமிழ்வது, சுகப்படுத்துவதற்கான வழியாக அல்லது அடையாளமாக யூதர்களாலும் புறமதத்தாராலும் கருதப்பட்டது. குணப்படுத்தும் மருந்தாக உமிழ்நீர் பயன்படுத்தப்பட்டதாக ரபீக்களின் எழுத்துக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குணமடையப் போகிறான் என்பதை அம்மனிதனிடம் வெறுமனே தெரிவிப்பதற்காக இயேசு உமிழ்ந்திருக்கலாம். எப்படியானாலும், இயேசு தமது உமிழ்நீரை இயற்கை நிவாரணியாக பயன்படுத்தவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்