16 அந்தத் தேசத்தைச் சேர்ந்த குருவுக்கு+ ஏழு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய அப்பாவின் ஆடுகளுக்காகக் கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு தொட்டிகளை நிரப்புவதற்கு அங்கே வந்தார்கள்.
3மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார்.