-
லேவியராகமம் 6:2-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “ஒருவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொருளோ, கொடுத்து வைக்கப்பட்டிருந்த பொருளோ தன்னிடம் இல்லையென்று மறுத்திருக்கலாம்,+ அல்லது அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றியிருக்கலாம், அல்லது மற்றவனுக்குச் சொந்தமானதைத் திருடியிருக்கலாம், அல்லது மோசடி செய்திருக்கலாம், 3 அல்லது யாரோ தொலைத்த பொருளைத் திருட்டுத்தனமாக எடுத்து வைத்திருக்கலாம். அவன் இதுபோன்ற ஒரு பாவத்தை மறைத்து பொய் சத்தியம் செய்து,+ யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டால்,+ இந்தச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: 4 திருடியதை, அபகரித்ததை, மோசடி செய்ததை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை, அல்லது தான் கண்டெடுத்ததை அவன் திருப்பித் தர வேண்டும். 5 அல்லது, எதைக் குறித்துப் பொய் சத்தியம் செய்தானோ அதைத் திருப்பித் தர வேண்டும் அல்லது அதற்கு முழு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.+ அதுமட்டுமல்ல, அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்துத் தர வேண்டும். தன்னுடைய குற்றம் நிரூபிக்கப்படும் நாளில் அதன் சொந்தக்காரருக்கு அதைக் கொடுக்க வேண்டும்.
-