-
லேவியராகமம் 8:22-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பின்பு, இரண்டாவது செம்மறியாட்டுக் கடாவை, அதாவது குருமார்களை நியமிக்கும்போது+ செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாவை, மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+ 23 மோசே அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார். 24 அதன்பின், ஆரோனின் மகன்களைக் கூப்பிட்டு, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அவர்களுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+
-