-
யாத்திராகமம் 18:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து திறமையான ஆண்களைத் தேர்ந்தெடுத்து 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும் நியமித்தார். 26 அவர்கள் ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து அவர்களுக்குத் தீர்ப்பு சொன்னார்கள். சிக்கலான வழக்குகளை மோசேயிடம் கொண்டுவந்தார்கள்,+ சின்னச் சின்ன வழக்குகளுக்கு அவர்களே தீர்ப்பு சொன்னார்கள்.
-
-
எண்ணாகமம் 27:1-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 யோசேப்பின் மகன் மனாசே, மனாசேயின் மகன் மாகீர், மாகீரின் மகன் கீலேயாத், கீலேயாத்தின் மகன் ஹேப்பேர், ஹேப்பேரின் மகன் செலோப்பியாத்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 2 இந்தப் பெண்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாசலுக்கு வந்து, மோசேக்கும் குருவாகிய எலெயாசாருக்கும் தலைவர்களுக்கும்+ ஜனங்களுக்கும் முன்னால் நின்று, 3 “எங்களுடைய அப்பா வனாந்தரத்தில் செத்துப்போனார், ஆனால் யெகோவாவுக்கு அடங்கி நடக்காத கோராகுவின் கும்பலோடு+ சேர்ந்ததால் அவர் சாகவில்லை, தன்னுடைய பாவத்தினால்தான் செத்துப்போனார். அவருக்கு மகன்கள் யாரும் இல்லை. 4 எங்களுடைய அப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதற்காக அவருடைய பெயர் ஏன் அவருடைய வம்சத்திலிருந்து மறைந்துபோக வேண்டும்? எங்கள் அப்பாவின் அண்ணன் தம்பிகளோடு எங்களுக்கும் சொத்தில் பங்கு கொடுங்கள்” என்றார்கள். 5 உடனே மோசே அவர்களுடைய வழக்கை யெகோவாவிடம் சொன்னார்.+
-