-
எண்ணாகமம் 21:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 ஆனால், சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்தரத்திலே போர் செய்யக் கிளம்பினான். அவன் யாகாசுக்குப் போய், அங்கே இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+ 24 ஆனால், இஸ்ரவேலர்கள் அவனை வாளால் வீழ்த்தி,+ அர்னோனிலிருந்து+ யாபோக் வரையுள்ள+ அவன் தேசத்தைக் கைப்பற்றினார்கள்.+ யாபோக் அம்மோனியர்களின் தேசத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், யாசேர்+ அம்மோனியர்களின் எல்லையாக இருந்ததால்+ அதைத் தாண்டி அவர்கள் போகவில்லை.
-
-
யோசுவா 12:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யோர்தானின் கிழக்குப் பகுதியில் இருந்த தேசத்தை, அதாவது அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து*+ எர்மோன் மலை+ வரையிலும் கிழக்கே அரபா முழுவதிலும்+ இருந்த தேசத்தை, இஸ்ரவேலர்கள் கைப்பற்றி, அங்கிருந்த ராஜாக்களைத் தோற்கடித்திருந்தார்கள். 2 அவர்களில் ஒருவன்தான், எஸ்போனில் வாழ்ந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன்.+ அவன் அர்னோன் பள்ளத்தாக்கின்+ ஓரத்தில் இருக்கிற ஆரோவேர் நகரத்தையும்+ கீலேயாத்தின் பாதிப் பிரதேசத்தையும் ஆட்சி செய்தான். அர்னோன் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியிலிருந்து யாபோக் பள்ளத்தாக்கு வரையுள்ள முழு பகுதியையும் ஆட்சி செய்தான். இந்த யாபோக் பள்ளத்தாக்கு அம்மோனியர்களின் எல்லையாகவும் இருந்தது.
-