-
உபாகமம் 27:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 “யோர்தானைக் கடந்த பின்பு, ஜனங்களுக்கு ஆசீர்வாதத்தை அறிவிப்பதற்காக சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் கெரிசீம் மலையில் நிற்க வேண்டும்.+ 13 சாபத்தை அறிவிப்பதற்காக ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஏபால் மலையில் நிற்க வேண்டும்.+
-
-
யோசுவா 8:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 அப்போது, எல்லா இஸ்ரவேலர்களும் அவர்களுடைய பெரியோர்களும் அதிகாரிகளும் நியாயாதிபதிகளும் இஸ்ரவேலர்களோடு வாழ்ந்த மற்ற தேசத்து ஜனங்களும்+ யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியின் இரண்டு பக்கங்களிலும் நின்றுகொண்டிருந்தார்கள். ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களாகிய குருமார்களைப் பார்த்தபடி அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் கிடைப்பதற்காக யெகோவாவின் ஊழியராகிய மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே,+ அவர்களில் பாதிப் பேர் கெரிசீம் மலைக்கு முன்பாகவும் பாதிப் பேர் ஏபால் மலைக்கு முன்பாகவும் நின்றார்கள்.+ 34 அதன்பின், திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த எல்லாவற்றையும் யோசுவா சத்தமாக வாசித்தார்.+ திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஆசீர்வாதங்களையும்+ சாபங்களையும்+ மற்ற எல்லா வார்த்தைகளையும் வாசித்தார்.
-