21 “அவன் கதையை முடிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம்; அவளை அவனுக்குக் கல்யாணம் செய்துகொடுப்பதாகச் சொல்லி பெலிஸ்தியர்களின் கையில் சிக்க வைத்துவிடுகிறேன்”+ என்று தன் மனதில் சொல்லிக்கொண்டார். பின்பு தாவீதிடம் இரண்டாவது தடவையாக, “நீ என் மகளைக் கல்யாணம் செய்துகொள், இன்று நாம் சம்பந்தம் பண்ணலாம்” என்றார்.
25 பெலிஸ்தியர்களின் கையால் தாவீதைச் சாகடிக்க சவுல் திட்டம் போட்டதால் தன் ஊழியர்களிடம், “நீங்கள் தாவீதிடம் போய், ‘ராஜாவுக்கு மணமகள் விலை*+ எதுவும் வேண்டாமாம், 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல்களை*+ கொண்டுவந்தால் போதுமாம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.