-
மத்தேயு 8:14-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 பேதுருவின் வீட்டுக்கு இயேசு வந்தபோது, பேதுருவின் மாமியார்+ காய்ச்சலில் படுத்திருந்ததைப் பார்த்தார்.+ 15 அவர் அவளுடைய கையைத் தொட்டவுடன்+ காய்ச்சல் போய்விட்டது, அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 16 சாயங்கால நேரமானபோது, பேய் பிடித்த நிறைய பேரை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அந்தப் பேய்கள்* அவர்களைவிட்டு ஓடிவிட்டன; எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். 17 “அவர் நம்முடைய வியாதிகளைத் தாங்கிக்கொண்டு, நம் நோய்களைச் சுமந்தார்”+ என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
-