-
லேவியராகமம் 16:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அந்த வெள்ளாட்டின் மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து இஸ்ரவேலர்கள் செய்த எல்லா குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் அந்த வெள்ளாட்டின் தலையில் சுமத்த வேண்டும்.+ பின்பு, அதை வனாந்தரத்தில் விடுவதற்கு நியமிக்கப்பட்டவரிடம் அதைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். 22 அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா குற்றங்களையும் சுமந்துகொண்டு+ வனாந்தரத்துக்குள் போகும்.+ நியமிக்கப்பட்டவர் அந்த வெள்ளாட்டை வனாந்தரத்துக்குள் போக விட்டுவிட வேண்டும்.+
-
-
1 யோவான் 2:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 சின்னப் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாமல் இருப்பதற்காக இந்த விஷயங்களை நான் உங்களுக்கு எழுதுகிறேன். ஆனாலும், நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான+ இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக* இருப்பார்.+ 2 நம்முடைய பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலி*+ அவர்தான்; நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்தின் பாவங்களுக்கும் பிராயச்சித்த பலி அவர்தான்.+
-