-
யாத்திராகமம் 2:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அதன் பின்பு, மோசேயும் அங்கு வந்து அவரோடு தங்கியிருக்க ஒத்துக்கொண்டார். ரெகுவேல் தன்னுடைய மகள் சிப்போராளை+ மோசேக்குக் கல்யாணம் செய்து வைத்தார். 22 அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது மோசே, “நான் வேறு தேசத்தில் அன்னியனாகக் குடியிருக்கிறேன்”+ என்று சொல்லி அவனுக்கு கெர்சோம்*+ என்று பெயர் வைத்தார்.
-
-
யாத்திராகமம் 18:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 இவரிடம்தான் மோசே முன்பு தன்னுடைய மனைவி சிப்போராளையும் இரண்டு மகன்களையும்+ அனுப்பி வைத்திருந்தார். எத்திரோ அவர்களைக் கவனித்துக்கொண்டார். 3 மோசேயின் ஒரு மகனுடைய பெயர் கெர்சோம்.*+ “நான் வேறு தேசத்தில் அன்னியனாகக் குடியிருக்கிறேன்” என்று சொல்லி மோசே அவனுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார். 4 அவருடைய இன்னொரு மகனின் பெயர் எலியேசர்.* “பார்வோனின் வாளிலிருந்து+ என்னைக் காப்பாற்றிய என்னுடைய முன்னோர்களின் கடவுள்தான் எனக்குத் துணை” என்று சொல்லி மோசே அவனுக்கு அந்தப் பெயரை வைத்திருந்தார்.
-