உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 21:21-24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 இஸ்ரவேலர்கள் எமோரியர்களின் ராஜாவான சீகோனிடம் ஆட்களை அனுப்பி,+ 22 “உங்கள் தேசத்தின் வழியாகப் போக எங்களுக்கு அனுமதி கொடுங்கள். அங்குள்ள எந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் நாங்கள் கால்வைக்க மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். நேராக ராஜ பாதையில் நடந்து உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்”+ என்று சொன்னார்கள். 23 ஆனால், சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்தரத்திலே போர் செய்யக் கிளம்பினான். அவன் யாகாசுக்குப் போய், அங்கே இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+ 24 ஆனால், இஸ்ரவேலர்கள் அவனை வாளால் வீழ்த்தி,+ அர்னோனிலிருந்து+ யாபோக் வரையுள்ள+ அவன் தேசத்தைக் கைப்பற்றினார்கள்.+ யாபோக் அம்மோனியர்களின் தேசத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், யாசேர்+ அம்மோனியர்களின் எல்லையாக இருந்ததால்+ அதைத் தாண்டி அவர்கள் போகவில்லை.

  • உபாகமம் 2:32-34
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 32 நம்மோடு போர் செய்வதற்காக சீகோன் தன் ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு யாகாசுக்கு வந்தபோது,+ 33 நம் கடவுளாகிய யெகோவா அவனை நம் கையில் கொடுத்தார். அவனையும் அவன் மகன்களையும் அவனுடைய எல்லா ஆட்களையும் நாம் தோற்கடித்தோம். 34 அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றி அழித்தோம். அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் ஒருவர்விடாமல் கொன்றுபோட்டோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்