24 குருமார்கள், லேவியர்கள், இசைக் கலைஞர்கள்,+ வாயிற்காவலர்கள், ஆலயப் பணியாளர்கள்*+ என அந்த ஆலயத்தில் சேவை செய்கிற யார்மேலும் எந்த வரியையும்*+ சுமத்தக் கூடாது.
17 கசிப்பியா என்ற இடத்திலிருந்த இத்தோ என்ற தலைவரைப் போய்ப் பார்க்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன். எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி இத்தோவிடமும் கசிப்பியாவில் ஆலயப் பணியாளர்களாக* இருந்த அவருடைய சகோதரர்களிடமும் சொல்லச் சொன்னேன்.