-
1 சாமுவேல் 2:14-16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 பின்பு, அந்த முள்கரண்டியில் சிக்குவதையெல்லாம் குருவானவருக்காக எடுத்துக்கொள்வான், குருவானவரும் வாங்கிக்கொள்வார். சீலோவுக்கு வரும் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் அவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள். 15 அதோடு, பலி செலுத்துகிறவர் கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே+ குருவானவரின் பணியாள் வந்து, “இறைச்சியை குருவானவருக்குச் சுட்டுக் கொடுக்க வேண்டும். வெந்த கறி வேண்டாம், பச்சைக் கறியைத் தா. அதைத்தான் அவர் வாங்கிக்கொள்வார்” என்று கேட்பான். 16 அதற்கு அந்த நபர், “அவர்கள் முதலில் கொழுப்பைத் தகனிக்கட்டும்,+ பின்பு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்வார். ஆனால் அந்தப் பணியாள், “வேண்டாம், இப்போதே தா. நீ தராவிட்டால், நானே எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான்.
-