உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 9:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 பின்பு, யோராமுக்கு எதிராக நிம்சியின் பேரனும் யோசபாத்தின் மகனுமான யெகூ+ சதித்திட்டம் தீட்டினார்.

      சீரியா ராஜாவான அசகேல்+ ராமோத்-கீலேயாத்தைப்+ பிடிக்க வந்ததால், யோராம் ராஜா இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு அதைப் பாதுகாக்கப் போயிருந்தார்.

  • 2 ராஜாக்கள் 9:24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 யெகூ சட்டென்று தன்னுடைய வில்லை எடுத்து யோராமின் முதுகில் அம்பு எறிந்தார், அது அவருடைய நெஞ்சைத் துளைத்துக்கொண்டு வெளியே வந்தது. யோராம் தன்னுடைய ரதத்தில் செத்து விழுந்தார்.

  • 2 ராஜாக்கள் 10:6, 7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 பின்பு, அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு கடிதத்தை யெகூ எழுதினார். அதில், “நீங்கள் என் பக்கம் இருந்தால், என் பேச்சைக் கேட்கத் தயாராக இருந்தால், நாளைக்கு இதே நேரம் உங்கள் எஜமானுடைய மகன்களின் தலைகளோடு யெஸ்ரயேலுக்கு வந்து என்னைப் பாருங்கள்” என்று எழுதினார்.

      அந்த இளவரசர்கள் 70 பேரும் தங்களை வளர்த்துவந்த பிரமுகர்களுடன் இருந்தார்கள். 7 அந்தக் கடிதம் கிடைத்ததும், இளவரசர்கள் 70 பேரையும் பிடித்து அவர்கள் வெட்டிக் கொன்றார்கள்.+ அவர்களுடைய தலைகளைக் கூடைகளில் போட்டு யெஸ்ரயேலில் இருந்த யெகூவிடம் அனுப்பினார்கள்.

  • 2 ராஜாக்கள் 10:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 பின்பு, யெகூவும் ரேகாபின் மகன் யோனதாபும்+ பாகால் கோயிலுக்குள் போனார்கள். அப்போது யெகூ அங்கிருந்த பாகால் பக்தர்களிடம், “நன்றாகத் தேடிப் பாருங்கள், யெகோவாவை வணங்குகிறவர்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது. பாகாலின் பக்தர்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டும்” என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 10:25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 தகன பலி கொடுத்தவுடன் காவலாளிகளையும் படை அதிகாரிகளையும் யெகூ கூப்பிட்டு, “உள்ளே வந்து வெட்டிக் கொல்லுங்கள், ஒருவனைக்கூட விடாதீர்கள்!”+ என்று கட்டளையிட்டார். உடனே காவலாளிகளும் படை அதிகாரிகளும் உள்ளே போய் அவர்களை வாளால் வெட்டிக் கொன்றார்கள், உடல்களை வெளியே வீசினார்கள். பாகால் கோயிலின் கருவறைவரைக்கும்* போய் அவர்களை வெட்டிச் சாய்த்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்