5 யெகோவாவின் வார்த்தைக்குப் பயப்படுகிறவர்களே, அவர் சொல்வதைக் கேளுங்கள்:
“என் பெயரின் காரணமாக உங்களை வெறுத்து ஒதுக்குகிற உங்கள் சகோதரர்கள், ‘யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்!’ என்று போலித்தனமாகச் சொல்கிறார்கள்.+
ஆனால், நான் வந்து உங்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
அவர்களோ அவமானம் அடைவார்கள்.”+