-
ஏசாயா 56:6, 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 என் ஜனங்களோடு சேர்ந்துகொள்ள வருகிற மற்ற தேசத்து ஜனங்களையும் நான் ஏற்றுக்கொள்வேன்.
யெகோவாவுக்குச் சேவை செய்யவும், யெகோவாவின் பெயரை நேசிக்கவும்,+
அவருடைய ஊழியர்களாக இருக்கவும் அவர்கள் வருவார்கள்.
அவர்கள் என்னுடைய ஓய்வுநாளின் புனிதத்தைக் கெடுக்காமல் அதை அனுசரிப்பார்கள்.
என்னுடைய ஒப்பந்தத்தின்படி நடப்பார்கள்.
7 அவர்களையும் என்னுடைய பரிசுத்த மலைக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
என்னுடைய ஜெப வீட்டில் அவர்களைச் சந்தோஷமாக இருக்க வைப்பேன்.
என்னுடைய பலிபீடத்தில் அவர்கள் செலுத்துகிற தகன பலிகளையும் காணிக்கைகளையும் ஏற்றுக்கொள்வேன்.
ஏனென்றால், என் வீடு எல்லா ஜனங்களுக்குமான ஜெப வீடு என்று அழைக்கப்படும்.”+
-
-
சகரியா 8:22, 23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 பல இனங்களையும் பலம்படைத்த தேசங்களையும் சேர்ந்தவர்கள், பரலோகப் படைகளின் யெகோவாவைத் தேடவும் யெகோவாவிடம் கருணை கேட்டுக் கெஞ்சவும் எருசலேமுக்கு வருவார்கள்.’+
23 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த நாட்களில், மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர்+ ஒரு யூதனுடைய உடையை* இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, “கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்”+ என்று சொல்வார்கள்.’”
-