-
மாற்கு 13:28-31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 அத்தி மர உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள்.+ 29 அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவர் கதவுக்குப் பக்கத்திலேயே வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.+ 30 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது.+ 31 வானமும் பூமியும் ஒழிந்துபோகும்,+ ஆனால் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது.+
-
-
லூக்கா 21:29-33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 அதன் பின்பு, அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்; “அத்தி மரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் கவனியுங்கள்.+ 30 அவை துளிர்ப்பதை நீங்கள் பார்க்கும்போது கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள். 31 அதேபோல், இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள். 32 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது.+ 33 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது.+
-