உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 22:15-18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 யெகோவாவின் தூதர் இரண்டாம் தடவை பரலோகத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, 16 “யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘என்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்,+ நீ உன்னுடைய ஒரே மகனை எனக்குக் கொடுக்கத் தயங்காததால்+ 17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+ 18 நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின்+ மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 105:8, 9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  8 அவர் தன்னுடைய ஒப்பந்தத்தை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறார்.+

      ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்குத் தந்த வாக்குறுதியை நினைத்துப் பார்க்கிறார்.+

       9 ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+

      ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பார்க்கிறார்.

  • மீகா 7:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 யாக்கோபுக்கு அவர் உண்மையாக இருப்பார்.

      ஆபிரகாமுக்கு மாறாத அன்பு காட்டுவார்.

      நம் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்