6 ஒரு நாளை விசேஷமாக நினைக்கிறவன் அதை யெகோவாவுக்காக* விசேஷமாக நினைக்கிறான். அதுபோலவே, சாப்பிடுகிறவன் யெகோவாவுக்காக* சாப்பிட்டு, அவருக்கு நன்றி சொல்கிறான்.+ சாப்பிடாதவனும் யெகோவாவுக்காக* சாப்பிடாமலிருந்து, அவருக்கு நன்றி சொல்கிறான்.+
3 திருமணம் செய்யக் கூடாதென்றும்,+ சில உணவுகளுக்கு விலகியிருக்க வேண்டுமென்றும்+ அந்தப் பொய்யர்கள் சொல்வார்கள். ஆனால், விசுவாசமுள்ளவர்களும் சத்தியத்தைத் திருத்தமாகத் தெரிந்தவர்களும் நன்றி சொல்லிச் சாப்பிடுவதற்காகத்தான்+ கடவுள் அந்த உணவுகளைப் படைத்திருக்கிறார்.+