அரண்மனைகள்
“அரண்மனைகளில்” (லூ 7:25) அல்லது “ராஜாக்களுடைய அரண்மனைகளில்” (மத் 11:8) வாழ்கிறவர்களைப் பற்றி இயேசு சொன்னபோது, மகா ஏரோது கட்டிய பல சொகுசான மாளிகைகள் மக்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். இங்கே போட்டோவில் காட்டப்பட்டிருப்பது, எரிகோவில் மகா ஏரோது கட்டிய குளிர் கால மாளிகையின் ஒரு பகுதியுடைய இடிபாடுகள். இந்தக் கட்டிடத்தில், தூண்கள் நிறைந்த ஒரு வரவேற்பு அறை இருந்தது. அதன் நீளம் 29 மீ. (95 அடி), அகலம் 19 மீ. (62 அடி). அதோடு, தூண்கள் நிறைந்த முற்றங்களும், அவற்றைச் சுற்றிலும் பல அறைகளும் இருந்தன. குளிர்சாதனங்கள் அல்லது வெப்பசாதனங்கள் கொண்ட பெரிய குளியல் அறையும் இருந்தது. படிகளைப் போன்ற அடுக்குகளைக் கொண்ட ஒரு தோட்டம் அந்த மாளிகையோடு இணைந்திருந்தது. யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பிப்பதற்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலகத்தில், அந்த மாளிகை தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஏரோதுவின் மகன் அர்கெலாயு அதை மறுபடியும் கட்டினான்.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: