பொருளடக்கம்
பகுதி 1 திரும்பி வர யெகோவா உதவி செய்வார்
கடந்தகால ஊழியர்களும் நம்மைப் போலவே கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால், யெகோவா அவர்களுக்கு உதவினார். உங்களுக்கும் கண்டிப்பாக உதவுவார். நம் மேய்ப்பரான யெகோவா, காணாமல்போன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். தன்னிடம் திரும்பி வருவார்கள் என்று ஆசையோடு காத்திருக்கிறார்.
பகுதி 1 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்”
பகுதி 2-4 யெகோவாவிடம் திரும்பி வருவதில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கலாம்?
யெகோவாவை உண்மையோடு வணங்கிய நிறைய பேர், கவலைகள்... கோபதாபங்கள்... குற்ற உணர்வு... போன்றவற்றால் சிலசமயங்களில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மறந்து அவருடைய மக்களோடு சேர்ந்து திரும்பவும் அவரைச் சந்தோஷமாக வணங்க யெகோவா அவர்களுக்கு எப்படி உதவினார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பகுதி 2 கவலைகள்—“எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம்”
பகுதி 3 மனம் புண்படுதல்—“ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்”
பகுதி 4 குற்ற உணர்வு—“என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள்”
பகுதி 5 யெகோவாவிடம் திரும்பி வர என்ன செய்யலாம்?
நீங்கள் திரும்பி வர வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். நிறைய பேர் எப்படி யெகோவாவிடம் திரும்பி வந்திருக்கிறார்கள் என்றும், சபையில் இருப்பவர்கள் அவர்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்றும், அவர்கள் மறுபடியும் சுறுசுறுப்பாகச் சேவை செய்ய மூப்பர்கள் எப்படி உதவினார்கள் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.