உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 மார்ச் பக். 7
  • இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • எரேமியா—கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளின் விரும்பப்படாத தீர்க்கதரிசி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • பைபிள் புத்தக எண் 24—எரேமியா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • பிரசங்கிப்பதற்கு எரேமியாவை யெகோவா அனுப்புகிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • எரேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 மார்ச் பக். 7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 12–16

இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்

யூதா மற்றும் எருசலேம் மக்கள் பெருமை பிடித்தவர்களாக இருந்தார்கள். யெகோவாவின் பேச்சை கேட்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தார்கள். அதனால், அவர்களை அழிக்க வேண்டும் என்று யெகோவா தீர்மானமாக இருந்தார். தன் தீர்மானத்தை மக்களுக்கு புரியவைப்பதற்கு யெகோவா எரேமியாவுக்கு ஒரு கஷ்டமான நியமிப்பைக் கொடுத்தார்.

எரேமியா எருசலேமிலிருந்து யூப்ரடிஸ் ஆறு வரை போய்விட்டு திரும்பி வருகிறார்

ஒரு நாரிழை இடுப்புவாரை எரேமியா வாங்கினார்

13:1, 2

  • இடுப்பில் கட்டப்பட்டிருந்த இடுப்புவார், அந்த மக்கள் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதை அடையாளப்படுத்தியது

எரேமியா, அந்த இடுப்புவாரை யூப்ரடிஸ் ஆற்றுக்கு கொண்டுபோனார்

13:3-5

  • ஒரு பாறை இடுக்கில் அதை மறைத்து வைத்துவிட்டு அவர் எருசலேமுக்கு திரும்பி வந்தார்

மறைத்து வைத்திருந்த இடுப்புவாரை கொண்டுவர எரேமியா யூப்ரடிஸ் ஆற்றுக்கு திரும்பவும் போனார்

13:6, 7

  • அது மிகவும் நாசமாகியிருந்தது

எரேமியா அந்த நியமிப்பை செய்து முடித்த பிறகுதான், அதை செய்ய சொன்னதற்கான காரணத்தை யெகோவா விளக்கினார்

13:8-11

  • பார்க்க அற்பமாக தோன்றும் விஷயத்தை செய்யும்படி எரேமியாவிடம் யெகோவா சொன்னார். எரேமியா அதை அப்படியே செய்தார். மக்களின் மனதை தொட யெகோவா எடுத்த முயற்சியை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது

உங்களுக்கு தெரியுமா?

எருசலேமிலிருந்து யூப்ரடிஸ் ஆற்றுக்கு எரேமியா இரண்டு முறை பயணம் செய்தார். அந்த ஆறு கிட்டத்தட்ட 500 கி.மீ. (300 மைல்) தூரத்தில் இருந்தது. அப்படியென்றால், அவர் சுமார் 2,000 கி.மீ. (1,200 மைல்) பயணம் செய்திருக்கலாம். அதற்காக அவர் ஒருவேளை மாதக்கணக்காக நடந்திருக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்