உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 76 பக். 180-பக். 181 பாரா. 2
  • ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • கடவுளுடைய வீட்டின்மேல் பக்திவைராக்கியம்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • யெகோவாவின் வணக்கத்தின் பேரில் வைராக்கியம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • யெகோவாவின் வணக்கத்தின் பேரில் வைராக்கியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 76 பக். 180-பக். 181 பாரா. 2
இயேசு ஒரு சாட்டையை வைத்து மிருகங்களை ஆலயத்திலிருந்து விரட்டுகிறார், காசு மாற்றுகிறவர்களின் மேஜைகளைக் கவிழ்த்துப் போடுகிறார்

பாடம் 76

ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

கி.பி. 30-ஆம் வருஷத்தின் வசந்த காலத்தில், இயேசு எருசலேமுக்குப் போனார். பஸ்கா பண்டிகைக்காக நிறைய பேர் அங்கே வந்திருந்தார்கள். அந்தப் பண்டிகை சமயத்தில் ஆலயத்தில் மிருகங்களைப் பலி கொடுப்பார்கள். அதற்காக, சிலர் தங்களோடு மிருகங்களைக் கொண்டுவந்தார்கள். மற்றவர்கள் எருசலேமில் அவற்றை வாங்கினார்கள்.

இயேசு ஆலயத்துக்குப் போனபோது, மக்கள் அங்கே மிருகங்களை விற்பதைப் பார்த்தார். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தார்கள். அதைப் பார்த்தபோது இயேசு என்ன செய்தார்? கயிறுகளால் ஒரு சாட்டையைச் செய்து, ஆடுமாடுகளை ஆலயத்திலிருந்து விரட்டினார். காசு மாற்றுகிற ஆட்களின் மேஜைகளைக் கீழே தள்ளினார். அவர்கள் வைத்திருந்த காசுகளைக் கீழே கொட்டினார். புறா விற்கிறவர்களைப் பார்த்து, ‘இதையெல்லாம் இங்கிருந்து கொண்டுபோங்கள்! என் அப்பாவின் வீட்டை வியாபாரம் செய்கிற இடமாக ஆக்காதீர்கள்’ என்று சொன்னார்.

இயேசு செய்ததைப் பார்த்து ஆலயத்தில் இருந்த மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘யெகோவாவின் வீட்டை நான் ரொம்ப நேசிப்பேன்’ என்று மேசியாவைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அவருடைய சீஷர்களுக்கு அப்போது ஞாபகம் வந்தது.

கி.பி. 33-ஆம் வருஷத்தில், ஆலயத்தை இயேசு இரண்டாவது தடவை சுத்தம் செய்தார். தன் அப்பாவுடைய வீட்டின் மரியாதையைக் கெடுக்க யாரையும் இயேசு விடமாட்டார்.

“நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது.”—லூக்கா 16:13

கேள்விகள்: ஆலயத்தில் சிலர் மிருகங்களை விற்பதைப் பார்த்தபோது இயேசு என்ன செய்தார்? இயேசு ஏன் அப்படிச் செய்தார்?

மத்தேயு 21:12, 13; மாற்கு 11:15-17; லூக்கா 19:45, 46; யோவான் 2:13-17; சங்கீதம் 69:9

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்