சஞ்சலத்தை தடுத்து விலக்கஇளைஞர்களுக்கு உதவுதல்
1 யெகோவா தம்முடைய மதிப்புமிக்க பரிசாகிய ஜீவனை நாம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக நம் இருதயத்தின் விருப்பங்களைத் தொடர அவர் நமக்கு ஓரளவு தனிப்பட்ட சுயாதீனத்தை அனுமதித்திருக்கிறார். ஆனால் செயல்படுவதற்கான அந்தச் சுயாதீனத்தோடுகூட, நாம் என்ன செய்கிறோமோ அதற்கு பொறுப்பாளிகளாக யெகோவா சரியாகவே நம்மை ஆக்குகிறார்.—பிர. 11:9.
2 அபூரணரும் பாவிகளுமாயிருக்கிற நாம் நம் வாழ்க்கையை நடத்தும் விதத்தின் விளைவாக நம்மீது வரும் சஞ்சலத்தை எவ்வாறு தடுத்து விலக்க முடியும்? (பிர. 11:10) அனுபவமற்ற இளைஞர்களும்கூட சஞ்சலத்தைத் தவிர்ப்பது கூடிய காரியமாகுமா? சந்தோஷகரமாக நமக்கு பதில் ஆம் என்று இருக்கிறது. வழிநடத்துதலுக்கான நம் தேவையைக் குறித்து யெகோவா நன்கு அறிந்திருக்கிறார், இந்தக் கடைசி நாட்களை குறிப்பிட்டுக் காட்டும் பெருங்குவியலான இடர்ப்பாடுகளின் வழியாக பாதுகாப்பாக கடந்து செல்ல இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும் உதவும் ஆலோசனையையும் வழிநடத்துதலையும் அன்புடன் அவர் கொடுத்திருக்கிறார்.—சங். 19:7; 119:9; 2 தீமோ. 3:1.
பெற்றோரின் உத்தரவாதம்
3 கஷ்டங்கள் எழும்புகையில், ‘நெகிழ்ந்த கைகளையும் முழங்கால்களையும் திரும்ப நிமிர்த்தி முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தமாகும்படி’ செய்ய இளைஞர்களுக்கு உத்தரவாதமுள்ள பெற்றோர்கள் தேவைப்படுகின்றனர். (எபி. 12:12, 13) ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையில் தங்கள் பிள்ளைகளை வைப்பதற்கு உதவி செய்ய, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சிந்தனையை அவ்வப்போது சரிசெய்ய வேண்டும். இதற்கு பொறுமையும், திறமையும், அதோடுகூட யெகோவாவின் திரளான ஆசீர்வாதங்களும் தேவைப்படுகிறது.
4 கெட்ட செல்வாக்குகளிலிருந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை முழுவதுமாக தடுத்து காக்க முடியாது. ஆனால் எவ்வாறு ஒரு பிள்ளையின் மனதை வலிமைப்படுத்தலாம்? ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையில் அவனை வளர்ப்பதன் மூலமாக. (எபே. 6:4) இதில் மற்ற காரியங்களோடுகூட குடும்ப படிப்பு, ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான வழிநடத்துதல், பள்ளி முடிந்த பிறகு ஆரோக்கியமான வேலைகள், பொருத்தமான சிட்சை மற்றும் பெற்றோர்களின் நல்ல முன்மாதிரி ஆகியவை உட்பட்டிருக்கின்றன.
5 ‘தேவ பக்தி’ மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்–பலன் தரும் விடைகள் என்ற புத்தகம் இளைஞர்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்டிருக்கிறது. பெற்றோர் சரியான தராதரங்களைப் பற்றி தங்கள் பிள்ளைகளுடன் காரணம் காட்டி பேசவும் இது உதவுகிறது. கடவுளின் சட்டங்கள் ஒரு பிள்ளையின் மனதிலும், இருதயத்திலும் திறம்பட்டவிதமாய் படிப்படியாக அறிவுறுத்தப்பட்டால், இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் செல்வாக்காக செயல்படும். இந்தப் புதிய பிரசுரத்தில் உள்ள விஷயங்களின் பேரில் குடும்ப கலந்தாலோசிப்பு செய்வது சஞ்சலத்தை தடுத்து விலக்க இளைஞர்களை பலப்படுத்தும்.
6 1989-ல் இளைஞர் கேட்கின்றனர் புத்தகம் வெளியிடப்பட்டபோது, மாநாட்டு பேச்சாளர் குழுமியிருந்த இளைஞர்களிடம் தன் கவனத்தைத் திருப்பி புத்தகத்தின் மதிப்பை சிறப்பித்துக்காட்டினார். குடும்ப கலந்தாலோசிப்பிற்கு ஓர் அடிப்படையாக அதை உபயோகிக்க பெற்றோர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும், “கலந்துபேசுவதற்கான கேள்விகள்” என்றழைக்கப்படும் ஓர் அம்சம் காணப்படுகிறது. இந்தக் கேள்விகள் விஷயங்களை பாரா–பாராவாக ஆராய்வதற்கென அமைக்கப்பட்டில்லை. ஒவ்வொரு கேள்வியும் ஒன்று அல்லது அதற்குமதிகமான உபதலைப்புகளை உட்படுத்துகிறது. சில குடும்ப தலைவர்கள் முழு அதிகாரத்தையும் வாசித்த பின்னர் கேள்விகளை சிந்திக்க தேர்ந்தெடுக்கலாம். வேறு சிலர் ஒத்திசைவான உபதலைப்புகளின் கீழிருக்கும் விஷயங்களை வாசிக்கையில் இடையிடையே நிறுத்தி கேள்விகள் கேட்கலாம்.
நம் பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுதல்
7 நம் பிராந்தியத்தில் நாம் அநேக இளைஞர்களைக் காணலாம். அவர்களுக்கிருக்கும் சில கேள்விகள் இந்தப் புதிய புத்தகத்தில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது, ஆகையால் ஜனவரி மாதத்தில் இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை வெளி ஊழியத்தில் நாம் சிறப்பித்துக் காட்டுவோம். ஒருவேளை நீங்கள் உபயோகிக்க விரும்பும் ஒரு பிரசங்கத்தை நீங்கள் ஏற்கெனவே தயாரித்திருப்பீர்கள். அல்லது நீங்கள் ஒருவேளை பின்வருபவற்றைப் போல சொல்ல விரும்பலாம்:
8 “இளைமைப் பருவம் நம் வாழ்க்கையின் அதிக சந்தோஷமான காலப்பகுதி என்பதாக நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், விசனகரமாக, இன்று நாம் அநேக சந்தோஷமற்ற இளைஞர்களைக் காண்கிறோம். அப்படியில்லையா? (பிரதிபலிப்புக்காக அனுமதியுங்கள்.) இளைஞர்களைப் பாதித்து அவர்களுடைய சந்தோஷத்தை எடுத்துப்போடும் அநேக பிரச்னைகளோடு உள்ள ஒரு குழப்பகரமான உலகை மாறிக்கொண்டே போகும் தராதரங்கள் உருவாக்கியிருக்கிறது. நம்பத்தக்க வழிநடத்துதலை அவர்கள் எங்கே காணலாம்? (குறிப்புக்காக அனுமதியுங்கள்.) சங்கீதம் 119:9-ல் பைபிள் என்ன சிபாரிசு செய்கிறது என்பதைக் கவனியுங்கள். (வாசியுங்கள்.) எது சரியானது என்பதைக் கற்பிப்பதில் பெற்றோர்களின் உத்தரவாதத்தைப் பைபிள் சிறப்பித்துக் காட்டுகிறது. பின்னர் நீதிமொழிகள் 1:8-ல் இந்தப் போதனையைக் கொடுக்கிறது. (வாசியுங்கள்.) இதற்கு இசைவாக, இளைஞர் கேட்கும் கேள்விகள்–பலன்தரும் விடைகள் புத்தகம் பைபிளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறையான வழிநடத்துதலினால் நிறைந்திருக்கிறது, தாங்கள் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்காலத்தை எதிர்ப்படலாம், மேலும் அவ்வாறு செய்வதில் சந்தோஷமடையலாம் என்பதை இளைஞர்கள் காண அவர்களுக்கு உதவிசெய்ய அநேக உண்மை–வாழ்க்கை அனுபவங்களை அது கொண்டிருக்கிறது. (ஆர்வத்தைத் தூண்ட அநேக அதிகாரங்களின் தலைப்புகளை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.) இந்த உதவியான மற்றும் அழகிய படங்களாலான புத்தகத்தை நன்கொடையாக ரூ. 15-க்கு நீங்கள் அனுபவிக்கலாம்.”
9 இளைஞர்கள் தங்கள் சக்திகளை ஞானமான, பயனுள்ள இலக்குகளை எட்ட உபயோகிக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிடுகிறது. அளவற்ற ஞானத்திற்கு ஊற்றுமூலமான பைபிளிடமாக இந்தப் புதிய புத்தகம் நிச்சயமாக அநேகரை வழிநடத்தும். இப்பொழுது ஒரு முழுமையான வாழ்க்கைக்கும், ஒரு பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் இளைஞர்களை வழிநடத்துவதற்கு என்னே ஒரு மதிப்பு வாய்ந்த கருவி!—பிர. 12:1.