பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 1-3
கிறிஸ்தவ சபையின்மீது கடவுளுடைய சக்தி பொழியப்பட்டது
கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமிலிருந்த பெரும்பாலான யூதர்கள் மற்ற தேசங்களிலிருந்து வந்திருந்தார்கள். (அப் 2:9-11) அவர்கள் திருச்சட்டத்தைப் பின்பற்றினாலும், தங்கள் வாழ்நாள் முழுவதையும் மற்ற தேசங்களிலேயே கழித்திருக்கலாம். (எரே 44:1) அதனால், அவர்களில் சிலருடைய தோற்றமும் பேச்சும் யூதர்களைப் போல் இல்லாமல், அவர்கள் குடியிருந்த நாட்டு மக்களைப் போல் இருந்திருக்கலாம். பல தேசங்களைச் சேர்ந்த இவர்களில் 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தபோது, கிறிஸ்தவ சபையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதாவது, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட சபையாக அது மாறியது. வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்த மக்கள் இருந்தபோதிலும், ‘அவர்கள் ஒரே நோக்கத்தோடு ஆலயத்தில் தினமும் கூடிவந்தார்கள்.’—அப் 2:46.
நீங்கள் எப்படி உண்மையான அக்கறை காட்டலாம்?
உங்கள் பிராந்தியத்திலிருக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு . . .
உங்கள் சபையிலிருக்கும் மற்ற தேசத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு . . .