பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 25-26
வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள்
வழிபாட்டுக் கூடாரத்துக்கும் சரி, இஸ்ரவேலர்களின் முகாமுக்கும் சரி, ஒப்பந்தப் பெட்டி மிக முக்கியமான பொருளாக இருந்தது. அந்தப் பெட்டியின் பிராயச்சித்த மூடிக்குமேல் இரண்டு கேருபீன்கள் இருந்தன. அவற்றுக்கு நடுவில் தோன்றிய மேகம் கடவுளுடைய பிரசன்னத்தைக் குறித்தது. ஒவ்வொரு வருஷமும் பாவப் பரிகார நாளில், தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் சென்றார். அங்கிருந்த பெட்டியின் மூடிக்கு முன்னால் இஸ்ரவேலர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக காளையின் இரத்தத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தையும் தெளித்தார். (லேவி 16:14, 15) மிகப் பெரிய தலைமைக் குருவாகிய இயேசு, பரலோகத்துக்குப் போய் யெகோவாவுக்கு முன்னால் தன்னுடைய மீட்பு பலியின் மதிப்பைக் கொடுத்ததுக்கு இது படமாக இருந்தது.—எபி 9: 24-26.
இந்த வசனங்களையும் மீட்பு பலியால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளையும் பொருத்திக் காட்டுங்கள்:
வசனங்கள்
நன்மைகள்
என்றென்றும் வாழும் நம்பிக்கை
பாவங்களுக்கான மன்னிப்பு
சுத்தமான மனசாட்சி
இந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?