8 அதன்பின், மோசேயையும் ஆரோனையும் பார்வோன் வரவழைத்து, “நான் உங்களுடைய ஜனங்களை அனுப்பத் தயார். போய் யெகோவாவுக்குப் பலி செலுத்துங்கள். ஆனால், இந்தத் தவளைகள் என்னைவிட்டும் என் ஜனங்களைவிட்டும் போய்விட வேண்டுமென்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள்”+ என்றான்.