-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்: நே.மொ., “கெட்டதாக இருந்தால்; பொல்லாததாக இருந்தால்.” கண்களில் ஏதாவது கோளாறு இருந்தால் அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியாது. அதேபோல், பொறாமையோடு பார்க்கும் கண்களால் உண்மையிலேயே முக்கியமான விஷயத்தின்மேல் கவனம் செலுத்த முடியாது. (மத் 6:33) அப்படிப்பட்ட கண் திருப்தி அடையாது, பேராசை பிடித்ததாக இருக்கும், அதன் கவனம் சிதறியிருக்கும், அது மோசம்போக்கும். அப்படிப்பட்ட கண் உள்ளவர்கள் விஷயங்களைத் தவறாக மதிப்பிடுவார்கள், சுயநலமாக வாழ்வார்கள்.—மத் 6:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
-