உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 28:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஓய்வுநாளுக்குப் பின்பு, வாரத்தின் முதலாம் நாள், பொழுது விடியும் நேரத்தில் மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கப் போனார்கள்.+

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 28
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28:1

      ஓய்வுநாளுக்கு: நே.மொ., “ஓய்வுநாட்களுக்கு.” இந்த வசனத்தில், ஓய்வுநாள் என்பதற்கான கிரேக்க வார்த்தை (சாபாட்டன்) பன்மை வடிவத்தில் இரண்டு தடவை வருகிறது. முதல் தடவை, அது வாரத்தின் ஏழாம் நாளை, அதாவது ஒரே நாளை, குறிக்கிறது; அதனால், ‘ஓய்வுநாள்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது தடவை, அது ஏழு நாட்களை மொத்தமாகக் குறிக்கிறது; அதனால், ‘வாரம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த ஓய்வுநாள் (நிசான் 15) சூரிய அஸ்தமனத்தின்போது முடிவுக்கு வந்தது. “ஓய்வுநாளுக்குப் பின்பு,” இருட்டும் நேரத்தில் நடந்ததைப் பற்றி மத்தேயு எழுதியதாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால், நிசான் 16-ன் ‘விடியற்காலையில்,’ ‘சூரியன் உதயமான நேரத்தில்’ அந்தப் பெண்கள் கல்லறையைப் பார்க்கப் போனார்கள் என்பதை மற்ற சுவிசேஷப் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.—மாற் 16:1, 2; லூ 24:1; யோவா 20:1; சொல் பட்டியலில் “ஓய்வுநாள்” என்ற தலைப்பையும், இணைப்பு B12-ஐயும் பாருங்கள்.

      வாரத்தின் முதலாம் நாள்: அதாவது, “நிசான் 16.” ஓய்வுநாளுக்கு அடுத்த நாள்தான் யூதர்களுக்கு வாரத்தின் முதல் நாளாக இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்