அடிக்குறிப்பு
a தோல் பதனிடுகிறவர்களை யூதர்கள் சிலர் தரக்குறைவாக நினைத்தார்கள்; ஏனென்றால், செத்துப்போன விலங்குகளையும் அவற்றின் தோல்களையும் அருவருப்பான மற்ற பொருள்களையும் தொட்டு அவர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதனால், ஆலயத்துக்குள் வர அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டார்கள்; இன்னும் சொல்லப்போனால், அவர்கள் வேலை செய்யும் இடமும்கூட நகரத்தைவிட்டு 70 அடி தூரத்துக்கும் மேல் தள்ளியிருக்க வேண்டும். சீமோனின் வீடு ‘கடலோரத்தில் இருந்ததற்கு’ இது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.—அப். 10:6.