அடிக்குறிப்பு
b மோசேயின் எழுத்துக்களிலிருந்து யாக்கோபு ஞானமாக மேற்கோள்காட்டி பேசினார். அதில், திருச்சட்டம் மட்டுமல்ல திருச்சட்டத்தைக் கொடுக்கும் முன் கடவுள் செய்த பிரமாண்டமான காரியங்களும் அவருடைய விருப்பத்தின் வெளிப்பாடுகளும் பதிவாகியிருந்தன. உதாரணத்துக்கு இரத்தம், பாலியல் முறைகேடு, சிலை வழிபாடு ஆகியவற்றைப் பற்றிய கடவுளின் கண்ணோட்டத்தை ஆதியாகம புத்தகத்தில் தெளிவாகப் பார்க்க முடியும். (ஆதி. 9:3, 4; 20:2-9; 35:2, 4) இப்படி, யூதராக இருந்தாலும் சரி, மற்ற தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களை யெகோவா வெளிப்படுத்தினார்.