அடிக்குறிப்பு
c அந்த நான்கு ஆண்கள் நசரேய விரதம் மேற்கொண்டிருந்தார்கள் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (எண். 6:1-21) திருச்சட்டமும் அதன் ஒரு அம்சமான நசரேய விரதமும் அப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பது உண்மைதான்; ஆனாலும், அந்த ஆண்கள் யெகோவாவிடம் நேர்ந்துகொண்ட விரதத்தை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று பவுல் நினைத்திருக்கலாம். அதனால், அந்த நான்கு பேரோடு போவதும், அவர்களுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்வதும் தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். அது என்ன விரதம் என்று நமக்குச் சரியாகத் தெரியாது; அது என்னவாக இருந்திருந்தாலும் சரி, பவுல் நிச்சயம் (நசரேயர்கள் செய்ததுபோல) மிருக பலிகளைப் பாவநிவாரண பலியாகச் செலுத்துவதற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டார். ஏன்? இயேசு கிறிஸ்து பரிபூரண பலியைச் செலுத்தியிருந்ததால், மிருகங்களைப் பாவநிவாரண பலிகளாகச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருந்தது. அதனால், பவுல் அந்தச் சமயத்தில் என்ன செய்தார் என்று நமக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும், அவர் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்திருக்க மாட்டார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.