அடிக்குறிப்பு
a மகா ஏரோது தான் இறப்பதற்கு முன், யூதேயாவையும் மற்ற பகுதிகளையும் ஆட்சி செய்ய தன் மகன் ஆர்க்கேலேயசைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஆர்க்கேலேயஸ் தன் ஆட்சியை ஆரம்பிப்பதற்கு முன் அகஸ்டஸ் சீசரின் அங்கீகாரத்தைப் பெற தூரத்திலிருந்த ரோமுக்குப் போக வேண்டியிருந்தது. இயேசு சொன்ன உவமை, மக்களுக்கு இதை ஞாபகப்படுத்தியிருக்கலாம்.