அடிக்குறிப்பு
b பல ஆண்டுகளாக தி உவாட்ச்டவர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு மட்டுமேயுரிய பத்திரிகை என்று கருதப்பட்டுவந்தது. எனினும் 1935-ன் ஆரம்பத்திலிருந்து, பூமியில் முடிவில்லா வாழ்க்கையைப் பெறும் நம்பிக்கையோடிருக்கும் ‘திரள் கூட்டத்தினர்’ தி உவாட்ச்டவர் இதழை வாங்கிப் படிக்கும்படி உற்சாகப்படுத்துவதற்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. (வெளிப்படுத்துதல் 7:9) ஒருசில ஆண்டுகளுக்குப் பின், 1940-ல், தி உவாட்ச்டவர் இதழ், தெருவில் காணப்படும் மக்களிடம் ஒழுங்காக அளிக்கப்பட்டது. அப்போதிருந்து வினியோகிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது.