அடிக்குறிப்பு
a “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்,” என்பதாக பைபிள் சொல்கிறபோதிலும், ஒரு நபரின் துன்பம் தெய்வ தண்டனையாக இருக்கவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. (கலாத்தியர் 6:7) சாத்தான் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், நீதிமான்கள் பொல்லாதவர்களைவிட அடிக்கடி அநேக பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். (1 யோவான் 5:19) “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்,” என்பதாக இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 10:22) நோயும் மற்ற வகையான இன்னல்களும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர் எவருக்கும் ஏற்படலாம்.—சங்கீதம் 41:3; 73:3-5; பிலிப்பியர் 2:25-27.