அடிக்குறிப்பு
a நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்யப்படுவதற்கு முன்பே பல மனைவிகளை வைத்திருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நியாயப்பிரமாணத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டுமிருந்தது. கடவுள் ஏதேன் தோட்டத்தில் தாம் ஏற்படுத்தியிருந்த ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நியதியை இயேசு கிறிஸ்து வருவதற்கு முன்பு மீண்டும் நிலைநாட்டுவதை பொருத்தமான சமயமாக கருதவில்லை. ஆனால் மறுமனையாட்டியை சட்டங்களின் மூலம் பாதுகாத்தார். பலதார மணம் இஸ்ரவேலர் எண்ணிக்கையில் விரைவாக பெருகுவதற்கு வழிவகுத்தது.