அடிக்குறிப்பு
a வேத வசனங்களில், “பகை” என்று கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு சற்று வித்தியாசமான அர்த்தங்கள் உள்ளன. சில சூழமைவுகளில், வெறுமனே குறைவாக நேசிப்பதை அது அர்த்தப்படுத்துகிறது; தமிழ் பைபிள் இதை வெறுப்பு என்பதாக கூறுகிறது. (உபாகமம் 21:15, 16) “பகை” என்ற வார்த்தை கடும் வெறுப்பையும் அர்த்தப்படுத்தலாம்; இவ்வித வெறுப்பு, தீங்கிழைக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்காவிட்டாலும், பகைக்கப்படும் பொருளை மிகவும் அருவருப்பதால் அதை தவிர்க்கும் எண்ணம் கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அதேசமயத்தில், “பகை” என்ற வார்த்தை பலத்த எதிர்ப்பை, பெரும்பாலும் வன்மத்தோடு கூடிய தீரா குரோதத்தைக்கூட அர்த்தப்படுத்தலாம். இந்த அர்த்தத்திலேயே பகையைப் பற்றி இக்கட்டுரை கலந்தாலோசிக்கிறது.