அடிக்குறிப்பு
a இந்தப் பூர்வகால பழக்கத்தைக் குறித்து விளக்குகையில் எஃப். சி. குக் என்பவர் தி ஹோலி பைபிள், வித் எக்ஸ்பிலனேட்டரி அன்டு கிரிட்டிக்கல் கமென்ட்டரி என்ற தனது நூலில் இவ்வாறு சொல்கிறார்: “தங்கம், வெள்ளி, அல்லது மணிக்கற்களை தண்ணீருக்குள் போட்டு அவற்றின் தோற்றத்தை ஆராய்வதன் மூலம் குறி சொல்லப்பட்டது. அல்லது கண்ணாடியில் பார்ப்பதுபோல வெறுமனே தண்ணீருக்குள் பார்க்கப்பட்டது.” பைபிள் கருத்துரையாளரான கிறிஸ்டஃபர் உவர்ட்ஸ்வர்த் இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதில் சூரியன் ஏற்படுத்தும் நிழலைப் பொறுத்து குறி சொல்லப்பட்டது.”