அடிக்குறிப்பு
b யோனா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை வலியுறுத்துவதற்கு, அவர் குறட்டைவிட்டதாகவும் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு சொல்கிறது. ஆனால், யோனா கவலையில்லாமல் தூங்கியதாக நாம் முடிவு செய்துவிடக் கூடாது; மனச்சோர்வில் துவண்டு போனவர்கள் சிலசமயத்தில் தங்களையே அறியாமல் தூங்கிவிடுவார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு கடும் துயரத்திலிருந்த சமயத்தில் பேதுருவும் யாக்கோபுவும் யோவானும் ‘துக்கத்தினாலே நித்திரை பண்ணினார்கள்’ என்பது நம் நினைவுக்கு வரலாம்.—லூக்கா 22:45.