அடிக்குறிப்பு
b வார்த்தைகளின் விளக்கம்: நம்முடைய யோசனைகளும் உணர்வுகளும் செயல்களும் எப்படி இருக்கின்றன என்பதை சோதித்துப் பார்த்து, நாம் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தீர்மானிக்கிற திறமையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இதைத்தான் மனசாட்சி என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 2:15; 9:1) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி, பைபிளில் இருக்கும் யெகோவாவின் தராதரங்களின் அடிப்படையில் நம்மை நியாயந்தீர்க்கிறது. நம்முடைய யோசனையும் சொல்லும் செயலும் சரியாக இருக்கிறதா இல்லையா என்று நியாயந்தீர்க்கிறது.