உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவாவுக்குப் பயப்படு, நீ சந்தோஷமாய் இருப்பாய்
    காவற்கோபுரம்—1987 | அக்டோபர் 1
    • ஞானத்துக்குச் செவிகொடு

      நீதிமொழிகள் 1:1-2:22 வாசியுங்கள். “யெகோவாவுக்குப் பயப்படுவது” அறிவின் சாராம்சமாக இருக்கிறது. நாம் சிட்சையை ஏற்றுக்கொள்வோமானால், தவறிழைப்பதில் பாவிகளுடன் சேர்ந்துகொள்ள மாட்டோம். தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு யெகோவா தவறு செய்பவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார்.

      ◆ 1:7—“யெகோவாவுக்குப் பயப்படு”வது என்றால் என்ன?

      அது பணிவோடுகூடிய அச்சம், ஆழ்ந்த மரியாதை மேலும் அவருடைய தயவான கிருபையையும் நற்குணத்தையும் நாம் போற்றுவதனால் அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஒரு ஆரோக்கியமான பயம். “யெகோவாவுக்குப் பயப்படு”தல் அவர் மிகஉயர்ந்த நியாயாதிபதி, சர்வவல்லமையுள்ளவர், அவருக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குத் தண்டனை அல்லது மரணத்தைக் கொண்டுவர அதிகாரமும் வல்லமையும் உடையவர் என்பதை அங்கீகரிப்பதைக் குறிக்கும். முழுவதுமாக அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய பார்வையில் கெட்டதாக இருப்பதை வெறுத்து, அவரை விசுவாசத்துடன் சேவிப்பதையும் அது குறிக்கிறது.—சங்கீதம் 2:11; 115:11; நீதிமொழிகள் 8:13.

  • யெகோவாவுக்குப் பயப்படு, நீ சந்தோஷமாய் இருப்பாய்
    காவற்கோபுரம்—1987 | அக்டோபர் 1
    • நமக்குப் பாடம்: நாம் யெகோவாவுக்குப் பயப்படுவோமானால் அவருடைய வார்த்தை மூலமாகவும் அமைப்பு மூலமாகவும் அவர் ஏற்பாடு செய்யும் சிட்சையை நாம் ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு செய்யத் தவறுவது நம்மை “மூடர்”களுடன், தெய்வபயமற்ற பாவிகளுடன் சேர்ப்பதாக இருக்கும்.—நீதிமொழிகள் 1:7; எபிரெயர் 12:6.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்