-
சிங்கங்களிடமிருந்து காப்பாற்றப்படுதல்!தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
-
-
7. பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜாவிடம் என்ன ஆலோசனையை முன்வைத்தார்கள், எந்த விதத்தில் அதைத் தெரிவித்தார்கள்?
7 தரியுவைப் பார்த்துப் பேச பிரதானிகளும் தேசாதிபதிகளும் ‘கூட்டமாய் உள்ளே நுழைந்தனர்.’ இதற்குப் பயன்படுத்தப்பட்ட அரமிய சொற்றொடர், பயங்கர அமளியை அர்த்தப்படுத்துகிறது. அப்படியென்றால் மிக அவசரமான விஷயத்தை தரியுவிடம் தெரிவிப்பதற்காக வந்திருப்பதுபோல் இவர்கள் காட்டிக்கொண்டார்கள். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று இவர்கள் பங்கில் உறுதியாகச் சொன்னால் ராஜா மறுவார்த்தை சொல்லமாட்டார் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆகவே இப்படி நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்தார்கள்: ‘எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியில a போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்ய வேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் [“பண்ணியிருக்கிறார்கள்,” NW].’—தானியேல் 6:6, 7.
8. (அ) கொடுக்கப்பட்ட ஆலோசனை ஏன் தரியுவுக்கு நல்லதாக தோன்றியது? (ஆ) பிரதானிகள் மற்றும் தேசாதிபதிகளின் உண்மையான உள்நோக்கம் என்ன?
8 மெசப்பொத்தேமியாவில் ராஜாக்கள் பொதுவாக தெய்வங்களாய் வணங்கப்பட்டதை சரித்திர பதிவுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஆகவே தரியு இந்த ஆலோசனையைக் கேட்டு பூரிப்படைந்திருப்பார் என்பது நிச்சயம். இதனால் உண்டாகவிருந்த நன்மையையும் அவர் யோசித்துப் பார்த்திருப்பார். பாபிலோனில் வசித்தவர்களுக்கு தரியு அயல்நாட்டவர், புதியவர் என்பதை நினைவில் வையுங்கள். இந்தப் புதிய சட்டம் அவர் ராஜா என்பதை நிலைநாட்டும். மேலும் இவரது புதிய அரசுக்கு ராஜபக்தியையும் ஆதரவையும் காட்ட பாபிலோனில் வசித்த திரளான ஜனங்களை அது உற்சாகப்படுத்தும். இருந்தாலும் பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜாவின் நலனைக் கருதி இந்த ஆலோசனையை வழங்கவேயில்லை. உண்மையில் அவர்களது உள்நோக்கம் தானியேலை சிக்கலில் மாட்டிவிடுவதே. ஏனெனில், மேல் அறையிலே ஜன்னல்கள் திறந்திருக்க, தினம் மூன்று வேளை அவர் கடவுளிடம் ஜெபிப்பது வழக்கம் என அவர்களுக்குத் தெரியும்.
9. ஏன் அந்தப் புதுச் சட்டம் புற மதத்தினரான பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாய் இல்லை?
9 ஜெபம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை, பாபிலோனிலிருந்த எல்லா மதத்தினருக்கும் ஒரு பிரச்சினையாக இருந்ததா? இல்லை, ஏனெனில் இந்தத் தடை ஒரு மாதத்திற்கு மட்டுமே அமலில் இருந்தது. அடுத்ததாக, சிறிது காலம் கடவுளுக்குப் பதிலாக ஒரு மனிதனை வணங்குவது இணங்கிவிட்டதற்கு சமமென புறமதத்தினர் கருதவில்லை. பைபிள் அறிஞர் ஒருவர் குறிப்பிடுவதாவது: “விக்கிரகாராதனையில் ஊறிப்போயிருந்த அந்தத் தேசத்திற்கு மன்னர் வணக்கம் என்பது பழக்கம் இல்லாத செயல் அல்ல. ஆகவே வெற்றிவீரரான மேதிய தரியுவை தெய்வமாய் வணங்க சொன்னபோது பாபிலோனியன் மறுபேச்சின்றி உடனடியாக கீழ்ப்படிந்தான். யூதன் மட்டுமே கீழ்ப்படிய மறுத்தான்.”
-
-
சிங்கங்களிடமிருந்து காப்பாற்றப்படுதல்!தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
-
-
a பாபிலோனில் “சிங்கங்களின் கெபி” உண்மையில் இருந்ததற்கு பூர்வ கல்வெட்டுகள் அத்தாட்சி அளிக்கின்றன. கிழக்கத்திய நாட்டு அரசர்கள் பெரும்பாலும் விலங்ககங்களை வைத்திருந்ததாக இவை காட்டுகின்றன.
-