-
சிங்கங்களிடமிருந்து காப்பாற்றப்படுதல்!தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
-
-
12. (அ) புதிய சட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட உடனேயே தானியேல் என்ன செய்தார்? (ஆ) தானியேலை யார் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், ஏன்?
12 ஜெபத்திற்குத் தடைவிதித்த சட்டத்தைப் பற்றி தானியேல் விரைவில் அறிந்துகொண்டார். உடனடியாக தன் வீட்டிற்குள் சென்று, எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்கும் மேலறைக்குள் நுழைந்தார். b அங்கே “தான் முன் செய்துவந்தபடியே” கடவுளிடம் ஜெபிக்க ஆரம்பித்தார். தனிமையில் இருப்பதாக தானியேல் நினைத்திருக்கலாம், ஆனாலும் சதிகாரர்கள் அவரை கண்காணித்துக் கொண்டிருந்தனர். தரியுவைச் சந்திக்கச் சென்ற அதே வேகத்தில் திடீரென அவர்கள் “உள்ளே திரண்டுவந்தனர்” (NW). இப்போது கண்கூடாகப் பார்த்துவிட்டார்கள்—தானியேல் ‘தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்துகொண்டிருந்தார்.’ (தானியேல் 6:10, 11) தானியேலை ராஜாவிடம் காட்டிக்கொடுப்பதற்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும் அந்தப் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும்.
-
-
சிங்கங்களிடமிருந்து காப்பாற்றப்படுதல்!தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
-
-
b மேலறை என்பது, எவரது தொந்தரவுமில்லாமல் தனிமையில் ஓய்வெடுப்பதற்கான தனி அறை.
-