-
பைபிள் தீர்க்கதரிசனத்தில் விசுவாசம் வைப்பது உயிரைப் பாதுகாக்கிறதுகாவற்கோபுரம்—2007 | ஏப்ரல் 1
-
-
மூன்று மாதங்களுக்குள்ளாக, சீரியாவைச் சேர்ந்த ரோம ஆளுநர் செஸ்டியஸ் காலஸ் யூதர்களின் கலகத்தை அடக்குவதற்காக 30,000 துருப்புகளுடன் தெற்கு முகமாய் அணிவகுத்து வருகிறார். அவருடைய படைவீரர்கள் கூடாரப் பண்டிகையின்போது எருசலேமை வந்தடைந்து அதன் புறநகர்ப் பகுதிகள் வழியாக விறுவிறுவென ஊடுருவுகிறார்கள். சொற்ப எண்ணிக்கையினரான ஸெலட்டுகள் ஆலயத்தின் கோட்டைக்குள் தஞ்சம் புகுகிறார்கள். சீக்கிரத்திலேயே ரோமப் போர்வீரர்கள் ஆலயத்தின் கோட்டைச் சுவரைச் சேதப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். யூதர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். யூத மதத்தின் புண்ணிய ஸ்தலத்தைப் பாழ்ப்படுத்துவது புறமத போர்வீரர்கள் அல்லவா! இருந்தாலும், ‘பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்’ என்று இயேசு சொன்னதை நகரத்திலுள்ள கிறிஸ்தவர்கள் நினைவுகூருகிறார்கள். (மத்தேயு 24:15, 16) இயேசு சொல்லியிருந்த தீர்க்கதரிசனத்தில் விசுவாசம் வைத்து, அதன்படி செயல்பட அவர்கள் தூண்டப்பட்டிருப்பார்களா? அப்படிச் செய்தால்தான் அவர்களுடைய உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், எப்படி?
திடீரென, வெளிப்படையான எந்தக் காரணமுமின்றி செஸ்டியஸ் காலஸ் தன் துருப்புகளுடன் கடற்கரை நோக்கிப் பின்வாங்கிச் செல்ல, ஸெலட்டுகளோ அவர்களைத் தொடர்ந்துபோய் விரட்டியடிக்கிறார்கள். அற்புதகரமாய், அந்நகரில் உபத்திரவத்தின் காலம் குறைக்கப்படுகிறது! இயேசுவின் தீர்க்கதரிசன எச்சரிப்பில் விசுவாசம் வைக்கிற கிறிஸ்தவர்கள் எருசலேமைவிட்டு பெல்லா என்ற நகரத்திற்கு ஓடிப்போகிறார்கள்; இது யோர்தான் நதியின் அக்கரையிலுள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் சச்சரவற்ற ஒரு நகரமாகும். கிறிஸ்தவர்கள் ஓடிப்போவது தக்க சமயத்திலாகும். ஏனெனில், ஸெலட்டுகள் சீக்கிரத்திலேயே எருசலேமுக்குத் திரும்பிவந்து, அங்கு மீந்திருக்கிற குடிமக்களை தங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபடும்படி வற்புறுத்துகிறார்கள்.a இதற்கிடையே பெல்லாவில் பாதுகாப்பாக இருக்கும் கிறிஸ்தவர்கள், அடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
-
-
பைபிள் தீர்க்கதரிசனத்தில் விசுவாசம் வைப்பது உயிரைப் பாதுகாக்கிறதுகாவற்கோபுரம்—2007 | ஏப்ரல் 1
-
-
a ஸெலட்டுகள் ஏழு நாட்கள் ரோமர்களைப் பின்தொடர்ந்து சென்று விரட்டியடித்த பின்பே எருசலேமுக்குத் திரும்பினார்கள் என சரித்திராசிரியரான ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறார்.
-