-
யெகோவாவின் நாளுக்கு நீங்கள் தயாரா?காவற்கோபுரம்—1997 | மார்ச் 1
-
-
9. மத்தேயு 24:36-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, என்ன குறிப்பை இயேசு சொன்னார்?
9 முன்னுரைக்கப்பட்ட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் இயேசுவின் வந்திருத்தலுக்குரிய அடையாளத்தின் மற்ற அம்சங்களும் இப்போது நிறைவேற்றமடைந்து வருகின்றன. ஆகவே, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவு சமீபத்திலிருக்கிறது. உண்மைதான் இயேசு சொன்னார்: “அந்த நாளையும் நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” (மத்தேயு 24:4-14, 36) ஆனால் ‘அந்த நாளுக்கும் நாழிகைக்கும்’ தயாராக இருக்கும்படியாக இயேசுவின் தீர்க்கதரிசனம் நமக்கு உதவிசெய்யலாம்.
-
-
யெகோவாவின் நாளுக்கு நீங்கள் தயாரா?காவற்கோபுரம்—1997 | மார்ச் 1
-
-
14. கடைசியாக யெகோவா நோவாவிடம் என்ன சொன்னார், ஏன்?
14 பேழை கட்டி முடிக்கப்பட்ட சமயத்தில், ஜலப்பிரளயம் எப்போது வரும் என்பதை நுட்பமாக அறிந்திராத போதிலும் அது உடனடியாக வரப்போகிறது என்பதாக நோவா ஒருவேளை யோசித்திருக்கலாம். கடைசியாக யெகோவா அவனிடமாக இவ்வாறு சொல்லவே செய்தார்: “இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும், பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்”ணுவேன். (ஆதியாகமம் 7:4) பேழைக்குள் எல்லா வகையான மிருகங்களையும் கொண்டு செல்வதற்கும் ஜலப்பிரளயம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர்கள்தாமே அதில் பிரவேசிப்பதற்கும் அவர்களுக்கு சரியாக போதுமான நேரத்தை மட்டுமே அது கொடுத்தது. இந்த ஒழுங்குமுறையின் அழிவின் ஆரம்பத்தைப் பற்றிய நாளையோ நாழிகையையோ நாம் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; மிருகங்களைப் பாதுகாக்க வேண்டிய வேலை நம்மிடம் ஒப்படைக்கப்பட்டில்லை; தப்பிப்பிழைக்கக்கூடிய மனிதர்கள் ஏற்கெனவே அடையாளப்பூர்வமான பேழையாக இருக்கும் கடவுளுடைய ஜனங்களின் ஆவிக்குரிய பரதீஸுக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
-