உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—2007 | ஆகஸ்ட் 1
    • 7. இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன் தன் சவாலை எவ்வாறு சமாளித்தான்?

      7 மறுபடியும் இயேசுவின் உவமைக்கே நம் கவனத்தைத் திருப்புவோம். அந்த ஐசுவரியவானுடைய நிலம் மிக நன்றாய் விளைந்து, தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லாமல் போனபோது அவன் என்ன செய்தான்? ஏற்கெனவே இருந்த களஞ்சியங்களை இடித்து, இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்டி அதில் மிகுதியாய் விளைந்த தானியங்களையும் நல்ல பொருள்களையும் சேர்த்துவைக்கலாம் என்று தீர்மானித்தான். அவனுடைய திட்டம் அந்தளவுக்கு பாதுகாப்புணர்வையும் திருப்தியையும் அவனுக்கு அளித்ததால் தனக்குள்ளே இவ்வாறு சிந்தித்துக்கொண்டான்: “ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்.”—லூக்கா 12:19.

      அவன் ஏன் ‘மதிகேடன்’?

      8. இயேசுவின் உவமையில் வருகிற அந்த மனிதன் எந்த முக்கியமான அம்சத்தை கவனிக்கத் தவறினான்?

      8 என்றாலும், இயேசு சொன்னதுபோல் அந்த ஐசுவரியவானின் திட்டம் பொய்யான பாதுகாப்புணர்வையே அளித்தது. அது நடைமுறையான திட்டம்போல் தோன்றியிருக்கலாம், ஆனால், ஒரு முக்கியமான அம்சத்தை விட்டுவிட்டது. அதுதான் கடவுளுடைய சித்தம். அந்த மனிதன் தன்னைக் குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான், தான் எப்படி இளைப்பாறி, புசித்துக் குடித்துப் பூரிப்பாயிருக்கலாம் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். தன்னிடம் “அநேகம் பொருள்கள்” இருப்பதால் ‘அநேக வருஷங்கள்’ வாழ முடியும் என்று நினைத்தான். ஆனால் வருத்தகரமாக, காரியங்கள் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. இயேசு முன்பு குறிப்பிட்டது போலவே, “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) அவன் உழைத்து சேர்த்ததெல்லாம் அந்த இரவே பிரயோஜனமில்லாமல் ஆகிவிட்டன. ஏனென்றால், கடவுள் அவனிடம், “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்றார்.—லூக்கா 12:20.

  • நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—2007 | ஆகஸ்ட் 1
    • 10. ‘அநேக பொருள்கள்’ இருந்தால் ‘அநேக வருஷங்கள்’ வாழ முடியும் என்று ஏன் சொல்ல முடியாது?

      10 நாம் இந்த உவமை கற்பிக்கிற பாடத்தை தியானிப்பது அவசியம். இந்த உவமையில் வருகிற மனிதன் தனக்காக ‘அநேக பொருள்களைச்’ சேர்த்து வைத்தான். ஆனால், ‘அநேக வருஷங்கள்’ வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்குத் தேவையானதைச் செய்யத் தவறிவிட்டான். நாமும் இந்த மனிதனைப்போல் ஆகிவிட வாய்ப்பிருக்கிறதா? (யோவான் 3:16; 17:3) “கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது” என்றும் “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:4, 28) எனவே, இயேசு தன் உவமையின் முடிவில் இந்த அறிவுரையையும் கூறினார்: “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”—லூக்கா 12:21.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்