-
திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது?காவற்கோபுரம்—1992 | மார்ச் 15
-
-
ஏனென்றால் மனித குலத்தின் சிருஷ்டிகர் முதல் மனுஷியை திருமணத்தில் முதல் மனிதனுக்குக் கொடுத்த போது, அவர் அவனுடைய மனைவிக்கும் அவர்களுடைய எதிர்கால பிள்ளைகளுக்கும் தலைவனாக இருக்கும்படி மனிதனை நியமித்தார். இது நியாயமாகவே இருந்தது. எந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்களின் தொகுதியிலும் எவராவது ஒருவர் தலைமைத்தாங்கி முடிவானத் தீர்மானங்களைச் செய்ய வேண்டும். திருமண விஷயத்தில் “புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்” என்று சிருஷ்டிகர் கட்டளையிட்டார்.—எபேசியர் 5:23.
-
-
திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது?காவற்கோபுரம்—1992 | மார்ச் 15
-
-
ஒரு கொடுங்கோலன் அல்ல
ஒரு கணவன் எவ்விதமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்த வேண்டும்? கடவுளுடைய குமாரனின் நேர்த்தியான முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம். பைபிள் சொல்கிறது: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:23, 25) இயேசு கிறிஸ்து தலைமைத்துவத்தை செலுத்தியது சபைக்கு ஆசீர்வாதமாக இருந்தது. அவர் ஒரு கொடுங்கோலனாக இருக்கவில்லை. அவர் தம்முடைய சீஷர்களைக் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக அல்லது ஒடுக்கப்பட்டவர்களாக உணரச் செய்யவில்லை. மாறாக, அவர்களை அன்பாகவும் இரக்கத்தோடும் நடத்துவதன் மூலம் அனைவருடைய மரியாதையையும் அவர் சம்பாதித்தார். கணவன்மாருக்குத் தங்கள் மனைவிகளை நடத்துவதில் பின்பற்றுவதற்கு என்னே ஒரு நேர்த்தியான முன்மாதிரி!
ஆனால் இந்த நேர்த்தியான முன்மாதிரியைப் பின்பற்றாத கணவர்மார் இருக்கிறார்கள். கடவுள் கொடுத்துள்ள தலைமைத்துவத்தை அவர்கள் தங்களுடைய மனைவிமாரின் நலனுக்காகப் பயன்படுத்துவற்குப் பதிலாக சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆணவமான முறையில் தங்கள் மனைவிமார் மீது அதிகாரம் செலுத்தி, முழுமையாக கீழ்ப்பட்டிருப்பதை வற்புறுத்தி அவர்களாகவே எந்தத் தீர்மானத்தையும் செய்ய அனுமதியாதிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கணவன்மாரின் மனைவிமார் அநேகமாக மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை நடத்துவதை, புரிந்து கொள்ள முடிகிறது. இப்படியாக நடந்துகொள்ளும் கணவனும்கூட, தன்னுடைய மனைவியின் அன்பான மரியாதையை சம்பாதிக்க தவறுவதன் காரணமாக துன்பமனுபவிக்கிறான்.
உண்மைதான், கடவுள் மனைவியிடம், குடும்பத்தின் தலைவனாக தன்னுடைய கணவன் பெற்றிருக்கும் ஸ்தானத்துக்கு மரியாதை காண்பிக்கும்படி தேவைப்படுத்துகிறார். ஆனால் கணவன் தன் மனைவியின் இருதயப்பூர்வமான மரியாதையை ஒரு நபராக அனுபவிக்க விரும்பினால் அதை அவன் சம்பாதிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த வழி பொறுப்புடன் நடந்து கொள்வதும், குடும்பத்தின் தலைவனாக நேர்த்தியான, தெய்வீக குணாதிசயங்களை வளர்த்துக் கொள்வதுமாகும்.
கீழ்ப்பட்டிருப்பது சம்பந்தப்பட்டது
மனைவியின் மீது கணவனின் அதிகாரம் முழுமையானதல்ல. ஒரு சில விதங்களில் மனைவியின் கீழ்ப்படிதலை, உலக ஆட்சியாளருக்கு ஒரு கிறிஸ்தவனின் கீழ்ப்படிதலுக்கு ஒப்பிடப்படலாம். ஒரு கிறிஸ்தவன் “மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிய” வேண்டும் என்பதாக கடவுள் கட்டளையிடுகிறார். (ரோமர் 13:1) என்றபோதிலும் இந்தக் கீழ்ப்படிதல் எப்போதும் நாம் கடவுளுக்குச் செலுத்த வேண்டியதோடு சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இயேசு சொன்னார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மாற்கு 12:17) இராயன் (உலக அரசாங்கம்) கடவுளுக்குரியதை அவனுக்குக் கொடுக்கும்படியாக வற்புறுத்துவானாகில் பேதுரு அப்போஸ்தலன், “மனுஷனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராக தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,” என்பதாகச் சொன்னதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 5:29, NW.
-
-
திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது?காவற்கோபுரம்—1992 | மார்ச் 15
-
-
தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கும்படி கட்டளையிட்ட தன்னுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீக குணங்களை ஒரு கணவன் பிரதிபலிக்கையில் அவன் தன்னுடைய மனைவியின் அன்பையும் மரியாதையையும் காத்துக் கொள்வான். (யோவான் 13:34) ஒரு கணவன் தவறு செய்யும் இயல்புள்ளவனாகவும், அபூரணமாகவும் இருந்தபோதிலும்கூட, அவன் தன்னுடைய அதிகாரத்தை இயேசு கிறிஸ்துவின் உன்னத தலைமைத்துவத்துக்கு இசைவாக பயன்படுத்துவானாகில் அவனை தலைவனாகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி காண்பதை மனைவிக்கு எளிதாக்குகிறான். (1 கொரிந்தியர் 11:3) ஒரு மனைவி கிறிஸ்தவ குணங்களாகிய அடக்கத்தையும் அன்புள்ள தயவையும் வளர்த்துக்கொள்வாளேயானால், தன் கணவனுக்கு தன்னைக் கீழ்ப்படுத்துவது அவளுக்குக் கடினமாயிராது.
-
-
திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது?காவற்கோபுரம்—1992 | மார்ச் 15
-
-
இப்படிப்பட்ட மனநிலை சபையில் வளர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவை விசேஷமாக கிறிஸ்தவ வீட்டில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கணவன் தன் மனைவியின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்ப்பதன் மூலம் தன்னுடைய உருக்கமான பாசத்தையும் சாந்தத்தையும் காண்பிக்கலாம். அவன் குடும்பத்தை பாதிக்கும் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு தன்னுடைய மனைவியின் கருத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மனைவிமார், அறிவற்றவர்கள் அல்ல. சாராள் தன் கணவன் ஆபிரகாமுக்குச் செய்தது போல அவர்கள் தங்கள் கணவன்மாருக்கு மதிப்புள்ள ஆலோசனைகளைக் கொடுக்க முடியும். (ஆதியாகமம் 21:12) மறுபட்சத்தில் ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனை நியாயமில்லாமல் வற்புறுத்துகிறவளாக இருக்கமாட்டாள். அவள் அவனுடைய தலைமையைப் பின்பற்றி, சில சமயங்களில் தன்னுடைய சொந்த விருப்பங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தபோதிலும்கூட அவனுடைய தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலம் அவள் தன் தயவையும் மனத்தாழ்மையையும் காண்பிப்பாள்.
நியாயமான ஒரு கணவன், நியாயமான ஒரு மூப்பரைப் போலவே எளிதில் அணுக முடிகிறவராகவும் தயவாகவும் இருப்பார். அன்புள்ள ஒரு மனைவி அபூரணத்தின் மத்தியிலும் வாழ்க்கையின் அழுத்தங்கள் மத்தியிலும் தன் பொறுப்புகளை நிறைவேற்ற அவர் எடுக்கும் முயற்சிகளை உணர்ந்தவளாய் இரக்கத்தோடும் நீடிய பொறுமையோடும் இருப்பதன் மூலம் பிரதிபலிக்கிறாள். இப்படிப்பட்ட மனநிலைகள் கணவன், மனைவி ஆகிய இருவராலும் வளர்த்துக்கொள்ளப்படும் போது ஒரு விவாகத்தில் கீழ்ப்பட்டிருத்தல் ஒரு பிரச்னையாக இருக்கப் போவதில்லை. மாறாக, அது சந்தோஷம், சமாதானம் மற்றும் நிலையான திருப்திக்கு காரணமாயிருக்கிறது. (w91 12/15)
-