-
மனநோயால் வாடுகிறவர்களுக்கு உதவுவதுகாவற்கோபுரம் (பொது)—2023 | எண் 1
-
-
“ஆறுதலாகப் பேசுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14.
உங்கள் நண்பர் பதட்டப்படலாம். வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று நினைக்கலாம். அப்போது, என்ன சொல்வது என்றே தெரியாமல் நீங்கள் திணறலாம். ஆனாலும், அவர்மேல் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதை காட்டினால், அவருக்கு ஆறுதலாக இருக்கும்.
-
-
மனநோயால் வாடுகிறவர்களுக்கு உதவுவதுகாவற்கோபுரம் (பொது)—2023 | எண் 1
-
-
“பொறுமையாக இருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:14.
உங்கள் நண்பர் சிலசமயத்தில் பேச விரும்ப மாட்டார். ஒருவேளை பேச விரும்பினால், அவர் சொல்வதை கேட்க தயாராக இருப்பதை காட்டுங்கள். சிலசமயம், அவர் சொல்கிற-செய்கிற விஷயங்கள் உங்களை காயப்படுத்தலாம். நீங்கள் அவரோடு சேர்ந்து செய்ய நினைத்த விஷயங்களை அவர் திடீரென்று மாற்றிவிடலாம். அவ்வப்போது அவர் ‘மூட்-அவுட்’ ஆகிவிடலாம். அவருடைய பிரச்சினையால்தான் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை புரிந்து, பொறுமையாக இருங்கள். அவரை தாங்கி பிடிக்கும் ஒரு சுவராக இருங்கள்.—நீதிமொழிகள் 18:24.
-